'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபர் ரயிலில் ஏறி போராட்டம் செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அந்த குடும்பத்திற்கு உதவி செய்வதாக அறிவித்திருந்த லாரன்ஸ், ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டை கட்டி கொடுத்து, யோகஸ்வரனின் நினைவுநாளான இன்று அதை அவர்களுக்கு அளித்தார். இன்று நடந்த கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் லாரன்ஸ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ், யோகேஸ்வரன் குடும்பத்தை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. யோகேஸ்வரன் தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தது மன நிறைவை தருகிறது. அரசியலில் செய்ய வேண்டியதை நான் இப்போது செய்து வருகிறேன். நான் அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை. ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சுயநலம் இல்லாத நல்ல உள்நோக்கம் கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வர எனக்கு பயமில்லை. ஆனால் என் அம்மா, என்னுடன் இருக்கும் குழந்தைகள் தற்போதைய அரசியல் சூழலை கண்டு பயப்படுகிறார்கள். என் தாய்க்கு அரசியல் பயம் போய், என்னை அரசியலுக்கு செல்ல அவர் சம்மதம் சொன்னால் அரசியலுக்கு வருவேன்.
இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.