சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
சரத்குமார் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஏ.வெங்கடேஷ். மகாபிரபு, சாணக்கயா, ஏய், சண்டமாருதம் படங்களை சரத்குமாரை வைத்து இயக்கினார் வெங்கடேஷ். அவர், தற்போது சரத்குமார் நடிப்பில் பாம்பன் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படம் பற்றி அவர் கூறியதாவது:
நீண்ட நாட்களாகவே எனக்கு பாம்பு படம் ஒன்று இயக்க வேண்டும் என்கிற ஆசை. இதனால் பாம்பு மனிதர்கள் பற்றிய பல செய்திகளை சேகரித்தேன். நீயா படத்தில் இச்சாதாரி என்ற பழிவாங்கும் பாம்பு அறிமுகமானது போல் எனது கதையிலும் ஒரு பாம்பு அறிமுகமாகிறது. இரண்டு வருடங்கள் இந்த கதையை எழுதினேன். இதில் நடிக்க நல்ல உடல்வாகுள்ள ஒரு ஹீரோ தேவை. பாம்பாக நடிக்க யார் முன்வருவார்கள் என்ற தயக்கம் இருந்தது. சரத்குமாரிடம் கதை சொல்ல சென்றேன். அவர் நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். அதன்பிறகு அவரை வைத்து போட்டோ ஷூட் எடுத்தோம். கச்சிதமாக அந்த கேரக்டருக்கு பொருந்தி நின்றார்.
சரத்குமார் தனித்துவமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கிடையாது. ஆனால் ஒரு புதுமுக நடிகர் ஒருவர் அறிமுகமாகிறார் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் அல்லது வேதிகா நடிக்கலாம், பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கோட்டா சீனிவாசராவ், வின்செண்ட் அசோகன், ரித்விகா உள்பட பலர் நடிக்கிறார்கள். என் கேரியரில் இது முக்கியமான படம். பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பலகோடி செலவு செய்கிறோம். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகிறது என்றார் ஏ.வெங்கடேஷ்.