ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த வியாழன் அன்று ரிலீஸானது. படத்திற்கு எழுந்த எதிர்ப்பே பிளஸ்ஸாக மாற வசூலை குவித்து வருகிறது பத்மாவத் படம். இதனால் தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இதுபோன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது என்றார்.
பத்மாவத் படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. மேலும் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள்.