பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
இந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் சந்தித்திராத எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், வழக்குகளையும், தடைகளையும் சந்தித்து அனைத்தையும் வென்று வெளிவந்திருக்கிறது பத்மாவத் திரைப்படம். பத்மாவத் படத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டது. அவை எல்லாவற்றிலும் பத்மாவத்துக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
கடைசியாக படம் வெளிவந்து விட்ட நிலையிலும் அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று டில்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மிஸ்ரா அடங்கிய பென்ஞ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் "பத்மாவத் திரைப்படத்தை தணிக்கை குழு நன்றாக ஆராய்ந்து சில காட்சிகளை நீக்கி, சில மாறுதல்களை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தை வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகும் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்தை திரையிடுவதை தடுக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.