ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
சிவாஜி கேர்ள் ஸ்ரேயா சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தவர், தற்போது நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். தெலுங்கில் மோகன்பாபு இரண்டு வேடங்களில் நடித்துள்ள காயத்ரி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டைட்டில் வேடத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, முதன்முறையாக பாரம்பரியம் மிக்க ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி ஸ்ரேயா கூறுகையில், நகரத்து கதைகளிலேயே அதிகமாக நடித்துள்ள எனக்கு பாரம்பரிய மிக்க கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக இருந்து வந்தது. அதனால் காயத்ரி படத்தில் அப்படியொரு வேடம் எனக்கு கிடைத்தபோது பெரிய மகிழ்ச்சியடைந்தேன். அதோடு, டைரக்டர் சொன்ன கதையை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாக முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன்.
கிராமத்து பெண்களின் நடை உடை பாவணைகளை உள்வாங்கி எனது நடிப்பில் அதை பிரதிபலித்தேன். அதனால் காயத்ரி படம் இதுவரை திரையில் பார்த்த ஸ்ரேயாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்ரேயாவை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும். அந்த வகையில், இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த வேடம் எனக்கு முழு மனநிறைவை கொடுத்துள்ளது என்கிறார் ஸ்ரேயா.