திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அந்த கட்சியை ஆந்திர மக்கள் ஆதரிக்கவில்லை. அதனால் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால் இப்போது அரசியலை விட்டு விலகி மீண்டும் முழுநேர நடிகராகியிருக்கிறார் சிரஞ்சீவி.
இந்த நிலையில், அவரது தம்பியான நடிகர் பவன்கல்யாண், தற்போது ஜனசேனா பார்ட்டி என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். அதன்காரணமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அரசியல் சுற்றுப்பயணம் செய்து வரும் பவன்கல்யாண், சில தினங்களுக்கு முன்பு அனந்தபூரில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, உங்களிடம் ஓட்டு கேட்பதற்காக இங்கே வரவில்லை. நானும் உங்களைப் போலவே விவசாயி தான். அதன்பிறகுதான் நான் நடிகன்.
உலக மக்களின் பசியை போக்கும் விவசாயிகள் பசியில் வாடுகிறார்கள். கடன் சுமையால் கஷ்டப்படுகிறார்கள். அதனால் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டுமென்று நான் போராடப்போகிறேன். இதற்காக விரைவில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பெருவாரியான விவசாயிகளை சந்திக்கப்போகிறேன் என்று பேசியுள்ளார். பவன்கல்யாணின் இந்த பேச்சுக்கு விவசாயிகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.