பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
நடிகை தமன்னா மீது நேற்று ரசிகர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் முன்னனணி நகை கடையின் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்த தமன்னா. பின்னர் கடைக்கு வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். அப்போது அவரை நோக்கி ஒரு செருப்பு பறந்து வந்தது. தமன்னா சாதுர்யமாக விலகிக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செருப்பு வீசியவரை பிடித்தனர். அவரை நாராயண் குடா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் கரிமுல்லா என்பதும், அவர் முசீராபாத்தை சேர்ந்தவர் என்பதும், தமன்னாவின் தவீர ரசிகர் என்பதும் தெரியவந்தது. சமீபகாலமாக தனக்கு பிடித்த தமன்னா, தனக்கு பிடிக்காத மோசமான கேரக்டர்களில் நடித்து வருவதால் அதிருப்தி அடைந்து செருப்பு வீசியதாக அவர் தெரிவித்தார். அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.