'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கண்டநாள் முதல் படத்தில் அறிமுகமான ரெஜினா, படிப்படியாக வளர்ந்து, ஹீரோயினாக உருவெடுத்தார். ஆனால், அவரது பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. மாநகரம் படத்தின் வெற்றி மூலம் மறுபிறவி எடுத்த அவருக்கு, இப்போது, மிஸ்டர் சந்திரமவுலி உட்பட, ஒரு டஜன் படங்கள் கைவசம் உள்ளனவாம்.
தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தான், முன்னுரிமை அளிக்கிறார், ரெஜினா. இதை, அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். தெலுங்கில் நடித்தால், அடுத்தபடியாக பாலிவுட்டுக்கு தாவி விடலாம் என்பது தான், இதற்கு காரணம். பிரபல தெலுங்கு நடிகர் நர ரோஷித்துக்கும், ரெஜினாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக, ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்கள் பரபரப்பாக பேசினாலும், இருவருமே, அந்த தகவலை மறுத்துள்ளனர்.