டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரன் ஆரியன், சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜித்தன் 2, மற்றும் 1ஏஎம் படங்களை தயாரித்த ஆர்பிஎம் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும், கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வருகிறார் ஆரியன். அவருக்கு ஜோடியாக உபாஷ்ணாராய் நடிக்கிறார். மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார், கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். ராகுல் என்ற புதுமுகம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
சோஷியல் மீடியா என்றழைக்கப்படும் சமூக வலைதளங்களினால் தவறான பாதைக்குள் போகும் இன்றைய இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஆபத்துக்களை விவரிக்கும் படம் தான் "கருத்துக்களை பதிவு செய்". படப்பிடிப்பு சென்னையில் துவங்கி ஒரே கட்டத்தில் நடைபெற்று, ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இன்றைய கால கட்டத்திற்கு அவசியமான படமாக இது இருக்கும். ஹீரோ ஆரியன் சினிமாவில் நடிப்பதற்காக நடனம், சண்டை உள்ளிட்ட எல்லா பயிற்சிகளையும் முறைப்படி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பு, ஆக்ஷ்ன் என இரண்டு ஏரியாவிலும் அவருக்கு திறமை காட்ட வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் அவருக்கு இந்தப்படம் ஒரு நல்ல களமாக இருக்கும் என்றார் இயக்குனர் ராகுல்.