இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை துரிதப்படுத்தியிருக்கிறார். இணையதளங்களில் கருத்துக்களை மட்டுமே பதிவு செய்து வந்தவர். தற்போது நேரடியாக களத்தில் குதிக்கிறார். இதற்காக தினமும் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அவர்களை அமைப்பு ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பண்படுத்தி வருகிறார். தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக பிப்ரவரி 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்திலிருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க இருக்கிறார்.
இந்த மக்கள் சந்திப்பு பயணத்திற்கு நாளை நமதே என்று எம்.ஜி.ஆர் படத்தின் பெயர் வைத்திருக்கிறார். அதோடு ஒரு கிராமத்தையும் தத்தெடுத்து நான் அடுத்து ஆட்சிக்கு வந்தால் நாட்டையும் இப்படித்தான் மாற்றுவேன் என்பதற்கான அடையாளமாக அந்த கிராமத்தை மாற்ற இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
நாளை நமதே என்பது சினிமா பெயராக இருக்கலாம். அவர் (எம்.ஜி.ஆர்) ஞாபகம் வந்தாலும் பரவாயில்லை. அவைகள் நல்ல ஞாபகங்கள் தான். ஆனால் தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக மாற்றிக் காட்டும் எங்கள் கனவே நாளை நமதே என்ற தலைப்பு. இது புதிய பயணமாக தோன்றலாம். ஆனால் என் மன்றத்தினர் செய்து வந்த பயணம் தான். இது புதிய சக்கரமல்ல. ஏற்கெனவே கண்டுபிடித்து சுழல விட்டுக் கொண்டிருந்தவர்களிடம் நானும் கற்று அதை என் மன்றங்களுக்கு மடை மாற்றியதுதான்.
உங்கள் பிரச்னை என்ன என்று மக்களிடம் கேள்வி வைத்தபோது, மின்சாரமில்லை, தெருவிளக்கு இல்லை. தெருவே இல்லை, பள்ளிகள் இல்லை, பள்ளி செல்ல பாதைகள் என்ற பதில்கள் தான் வந்தது. எனவே அந்த பணிகள் நோக்கி மன்றங்கள் திருப்பப்பட்டன. அடுத்து, கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம், உடல்தானம் என்ற அடுத்தடுத்த இலக்குகளை நோக்கிச் சென்றோம். அடுக்கடுக்கான தேவைகளும், எங்களுக்கான கனவுகளும் நிறைய இருக்கிறது. இதை பதம் பார்ப்பதற்காக ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளோம். முன்மாதிரி கிராமத்தை நிஜமாகவே உருவாக்கி காட்டுதவற்கான முயற்சி இது.
மாவட்டத்துக்கு ஒரு கிராமம், மாநராட்சிக்கு ஒரு கிராமம் என அகலக்கால் வைக்கப்போவதில்லை. முதலில் ஒரு கிராமம். அதற்காக நாங்கள் போடும் திட்டம். அதை செயல்படுத்துதல் இதுதான் இப்போதைக்கு. ஹார்வர்டு பல்கலைகழகத்திலும் இது பற்றித்தான் பேசப்போகிறேன். நான் அங்கு செல்வதே திறமைகளை சேர்க்கத்தான். ஆர்வத்துடன் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல் கிராமத்தில் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்வோம்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.