600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். பாகுபலி 2 படத்தை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் வெளியாக உள்ள படம் பாகமதி. அசோக் இயக்கி உள்ளார். தெலுங்கில் உருவாகி உள்ள இப்படம் தமிழிலும் ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் புரொமோஷனுக்காக இரண்டு மொழிகளிலும் பம்பரமாய் சுழன்று வருகிறார் அனுஷ்கா.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது. இந்தியாவில் 60 சதவீத பெண்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் இதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை.
பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற செயல்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் தைரியம் பிறக்கும். பாகுபலி 2 படத்தில் என்னை தொடுபவரின் கையை வெட்டுவேன். அதுபோன்று நிஜவாழ்க்கையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வக்கிரபுத்திக்காரர்களின் கையை வெட்ட வேண்டும்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.