வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் 'பக்கா'. அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை 'பென் கன்ஸ்டோரியம்' நிறுவனம் சார்பில் டி.சிவக்குமார் தயாரித்துள்ளார்.
இலங்கைத்தமிழரான இவர் இதற்கு முன் 'அதிபர்' என்ற படத்தை தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். பக்கா படத்திலும் தயாரிப்பாளர் டி.சிவக்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த தகவலை கதாநாயகன் விக்ரம் பிரபுவிடம் இயக்குநர் சொல்லாமல் மறைத்துவிட்டாராம். பின்னர் இதை அறிந்த விக்ரம் பிரபு, தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் விஷயத்தை என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று இயக்குநருடன் கோபப்பட்டிருக்கிறார்.
தன்னுடைய காட்சிகளை குறைத்து ஒருவேளை தயாரிப்பாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ என்பது விக்ரம் பிரபுவுக்கு வந்த சந்தேகம். அதன் காரணமாகவே இயக்குநருக்கு டோஸ் விட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக விக்ரம் பிரபுவை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.
இது ஒரு பக்கம் இருக்க, பக்கா படத்தை தொடர்ந்து தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் டி.சிவக்குமார். அந்தப் படத்துக்கு 'தர்மம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திய கதை இது. 'பக்கா' வெளியானதும் 'தர்மம்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகின்றன.