‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மிஷ்கின் தயாரித்து, நடித்துள்ள படம் சவரக்கத்தி. அவரே கதை திரைக்கதை வசனமும் எழுதியுள்ளார். அவரது தம்பி சி.ஆர்.ஆதித்யா இயக்கி உள்ளார். ராம், பூர்ணா, அஷ்வத், மோகன் ஆதேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் விளம்பரங்களில் மிஷ்கினின் சவரக்கத்தி என்றும், கதை திரைக்கதை, தயாரிப்பு மிஷ்கின் என்றும் பெரிய எழுத்துக்களில் போட்டுவிட்டு, இயக்குனர் ஆதித்யாவின் பெயரை சின்னதாக போட்டுள்ளனர். நேற்று நடந்த படத்தின் அறிமுக விழாவில் இதுகுறித்து வருத்தப்பட்டு பேசினார் இயக்குனர் ஆதித்யா. "நான் அடுத்த படம் எடுத்தால் படத்துக்கு பெயரையே "ஆதித்யா படம்" என்று வைப்பேன்" என்றார் இதற்கு பதிலளித்து மிஷ்கின் பேசியதாவது:
நான் என்னுடைய தம்பியும், இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் இறந்த பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும், நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும்.
எனக்கு சவரகத்தி படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த படம் வெற்றி பெற்றால் அதற்கு 90 சதவிகித காரணம் பூர்ணா. பத்து சதவிகிதம் ராம். வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன். வெற்றி பெற்ற அன்றே சவரக்கத்தி இரண்டாம் பாகம் கதை அறிவிப்பேன். அவ்வளவு கதைகள் கைவசம் இருக்கிறது. என்றார் மிஷ்கின்.