சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
பாடகர் யேசுதாசின் மகனும், பாடகருமான விஜய் யேசுதாஸ் மாரி படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். தற்போது அவர் படை வீரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். இவருடன் பாரதிராஜா, அம்ரிதா, கல்லூரி அகில், நித்திஷ், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் வருகிற பிப்ரவரி 9ந் தேதி வெளிவருகிறது. படம் தாமதமானது ஏன் என்பது குறித்து இயக்குனர் தனா கூறியதாவது:
இது மதுரை மண்சார்ந்த கதை. ஒரு சாதாரண கிராமத்து இளைஞனுக்குள் அவர் சார்ந்த சமூகம் கொண்டு வரும் மாற்றம் தான் கதை. பாரதிராஜா காலத்து கிராமத்தை தேடிக் கண்டுபிடித்து இதனை படமாக்கி இருக்கிறோம். இதில் பாரதிராஜா நடிக்க வேண்டும் என்று சொன்னபோது சில கேள்விகள் கேட்டு தன்னை தெளிவுபடுத்திய பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். இப்போது படத்தை பார்த்துவிட்டு தெளிவான படமாக உருவாகி இருப்பதாக பாராட்டினார்.
நான் மணிரத்னம் சாரிடம் உதவியாளராக இருந்தேன். அவரிடமிருந்து விலகி தனியாக படம் இயக்க முயற்சித்தபோது எல்லோரும் கதை பிடித்திருக்கிறது நல்ல தயாரிப்பாளருடன் வாருங்கள் என்று ஹீரோக்களும், நல்ல ஹீரோவுடன் வாருங்கள் என்று தயாரிப்பாளர்களும் இழுத்தடித்தார்கள். சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்தபோதுதான், எனது அண்ணன் மதிவாணன் நாமே தயாரிக்கலாம் என்று முன் வந்தார்.
எங்கள் சொந்தப் பணத்தில் உருவாகும் படம் என்பதால் பார்த்து பார்த்து செதுக்க வேண்டியது இருந்தது. யாரிடமும் வட்டிக்கு வாங்கி படம் எடுக்காததால் எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. கிளைமாச்சில் நிறைய கிராபிக்ஸ் வேகைள் இருந்தது. அதன் காரணமாகவும் படம் சற்று தாமதமாகிவிட்டது என்றார்.