தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ரோஜா, சென்னை வளசரவாக்கத்தில் தனது கணவர் ஆர்.கே.செல்மணி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆந்திராவைச் சேர்ந்த ரோஜாவுக்கு ஐதராபாத் மணிகொண்டா பகுதியில் சொந்த வீடு இருக்கிறது. தற்போது அவர் நகரி தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பதால் இந்த வீட்டையும் அவர் பயன்படுத்தி வந்தார்.
பொங்கல் பண்டிகைக்காக சென்னை வந்தவர் 10 நாட்களுக்கு பிறகு நேற்று குடும்பத்துடன் ஐதராபாத் வீட்டுக்குச் சென்றார். வீட்டை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த பணம், நகைகளை யாரோ திருடிச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் மதிப்பு 10 லட்சம்.
தனது வீட்டில் திருட்டுப்போனது குறித்து நடிகை ரோஜா மாதாபூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் இரண்டு வேலைக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்பில்லை. அவர்களும் தகவல் தெரிவிக்கவில்லை எனவே வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ரோஜா போலீசிடம் தெரிவித்திருக்கிறார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.