இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல பாப் இசை பாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் (எ) சுராங்கனி எ.இ.மனோகர் சென்னையில் காலமானார். இவர் சுராங்கனி என்ற பாடல் மூலம் திரைத்துறையில் பிரபலமானார். இலங்கையை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடத்தும் உள்ளார். மேலும் பல டி.வி. சீரியல்களும் நடந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்தவரான மனோகர், பெற்றோரை போன்று பாடும் ஆற்றல் பெற்றவர். இதனால், அவர்கள் வழியே பாடகரானார். ஆரம்பத்தில் தேவாலயங்களில் பாடி வந்தவர், பின்னர் பள்ளி, கல்லூரிகளில் பாட தொடங்கினார். இலங்கை, கொட்டஹேன பகுதியில் முதன்முதலாக இசைக்கச்சேரியில் ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடல் தான் சுராங்கனி. அதற்காக இவர் பெற்ற ஊதியம் ரூ.50/- மட்டுமே. இதனால் இதே பாடலை இந்தியாவில் சென்று பாட வேண்டுமென் ஆர்வம் இவருக்கு ஏற்பட்டது.
இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு மாதமாக வாய்ப்பு தேடி அழைந்தார். பின்னர் வாணி மகாலில் நிகழ்ச்சியொன்றில் பாடினார். அதைக் கேட்ட எச்.எம்.வி.நிறுவனம் இசைத்தட்டில் இவரைப் பாடவைத்து வெளியிட ஒப்பந்தம் செய்தனர். இவருடைய சுராங்கனி பாடல் அந்தக்கால இளைஞர்களின் கொண்டாட்ட பாடலாக இருந்தது.
பாடகராக இருந்தவர், யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட பாச நிலா-வில் கதாநாயகனாக நடித்தார். தமிழ்நாட்டிற்கு வந்த பின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. முதல் படம் டூபான் மெயில் என்ற தெலுங்குப் படம். இவரது சிகை அலங்காரத்தைக் கவனித்த இயக்குநர் அப்படத்தில் ஒரு வெளிநாட்டுக் கடத்தல்காரனாக நடிக்க வாய்ப்பளித்தார்.
அதன்பின் மலையாளத்தில் சந்திரகுமார் இயக்கத்தில் தடவரா என்ற படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து மலையாளத்தில் மாமாங்கம் என்ற படத்தில் கே.ஆர்.விஜயாவின் முறைபையனாக நடித்தவர் சக்தி, கழுகன், நடிகர் ஜெயனுடன் ஆவேசம், கோளிளக்கம் போன்ற படங்களிலும் நடித்தார்.
கோளிளக்கம் படப்பிடிப்பின்போது தனது நண்பனான நடிகர் ஜெயனின் அகால மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திரையுலகையே வெறுத்து லண்டனுக்குச் சென்றவர், அங்கு பி.பி.சி-யில் பணியில் சேர்ந்தார். 9 வருடங்கள் லண்டனில் இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். துருப்பு குலாம் என்ற மலையாளப் படம்தான் இவரது மறு வரவுக்கு ஆரம்பமாகயிருந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
தமிழில், காஷ்மீர் காதலி, தீ, அதே கண்கள், ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா , உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, காதல் கொண்டேன், பாண்டித்தியம் என சுமார் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மனோகருக்கு மனைவியும், கலா மேரி, செல்வ மேரி என்ற இரட்டை பெண் பிள்ளைகளும், டங்க்ஸ்டன் பாபு என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இலங்கையிலும், மகன் கத்தாரிலும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர்.