தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். தமிழில் பொம்மலாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ரஜினி நடிக்கும் காலா படத்தில் நடித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ரஜினி மிகவும் எளிமையான மனிதர் அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியல் சாக்கடை போன்றது. அதில் நல்லவர்கள் இறங்க முடியாது. அப்படி இறங்கியவர்களால் ஜெயிக்க முடியாது. ரஜினி மிக எளிமையான மனிதர். அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. இதை நான் அவரிடத்தில் நேரடியாகவே கூறியிருக்கிறேன். அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதிராக மக்கள் போராடுவார்கள். அப்போது சினிமா மூலம் கிடைத்த புகழ் அனைத்தையும் இழக்க வேண்டியது இருக்கும். ரஜினி அரசியலுக்கு செல்வது குறித்து இன்னும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் நானா படேகர்.