பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பாவனாவும், கன்னட இளம் தயாரிப்பாளர் நவீனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் காதலுக்கும், திருமணத்துக்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில்தான், பாவானவில் வாழ்க்கையில் சில அசாதாரண நிகழ்வுகள் நடந்தது.
அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தவர் நவீன். அந்த நிகழ்வுகளிலிருந்து பாவனா மீண்டு வந்ததும் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது டிசம்பர் மாதம் 22ந் தேதி திருமணம் நடக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தேதியில் திருமணம் நடக்கவில்லை. இதனால் பல்வேறு வதந்திகள் உலா வந்தது.
இந்த நிலையில் ஜனவரி 22ந் தேதி திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இதனை பாவனாவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நேற்று வருகிற 22ந் தேதி திருமணம் நடக்கவில்லை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போகிறது என்ற செய்திகள் பரவியது. இதையொட்டி பாவனாவின் சகோதரர் ராஜேஷ் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:
பாவனாவுக்கும், நவீனுக்கும் வருகிற 22ந் தேதி திருச்சூரில் உள்ள நேரு அரங்கில் காலை திருமணம் நடக்கிறது. அன்று மாலை அதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். பாவனா திருமணம் தள்ளி வைக்கப்படுவதாக வந்த செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.