தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரும்பாலும் ஒரு படம் வெளியாகி ஹிட்டான பின்பு, அடுத்த நாளிலேயே இது தன்னுடைய கதை என சிலர் புகார் மடல் வாசிப்பதுண்டு. சமீபத்தில் அறம், அருவி படங்களுக்கு கூட அப்படி சர்ச்சையான நிகழ்வுகள் நடந்தன. அதேசமயம் சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கெட்ச்' படத்தை பார்த்துவிட்டு, இது தன்னுடைய குறும்படத்தின் கதை என போர்க்கொடி தூக்கியுள்ளார் இயக்குனர் சாய் பிள்ளை என்பவர்.
2௦15-ஆம் வருடத்தில் இவர் 'முருகா' அசோக் குமாரை வைத்து 'ஸ்கெட்ச்' என்கிற 25 நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை இயக்கி, அதை யூடியூப்பிலும் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் 'ஸ்கெட்ச்' படத்தை பார்த்துவிட்டு தனது குறும்படத்தின் கான்செப்ட்டை அப்படியே காப்பியடித்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக்கில் குமுறி வருகிறார் சாய் பிள்ளை.
பைனான்ஸியர்களிடம் சரியாக ட்யூ கட்டாதவர்களின் கார்களை தூக்கி வரும் வேலை பார்க்கும் நாயகனின் கதை தான் 'ஸ்கெட்ச்'. சாய் பிள்ளை இயக்கியுள்ள குறும்படத்திலும் ட்யூ கட்டாத கார்களை தூக்குவது தான் கான்செப்ட் என்றாலும் இதைமட்டுமே வைத்து 'ஸ்கெட்ச்' படம் தன்னுடைய கதை என அவர் சொல்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.