கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மலையாள நடிகர்கள் சுரேஷ் கோபி, பகத் பாசில், நடிகை அமலாபால் ஆகியோர் சொகுசு கார்களை வாங்கி, அதனை போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரியில் பதிவு செய்த வகையில் பல லட்சம் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கேரள குற்றப்பிரிவு போலீசார் இந்த மூவர் மீதும் வரிஏய்ப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் நடிகர் பகத் பாசில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார். சுரேஷ் கோபி கைதுக்கு தடைகோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் 3 வாரங்கள் தடை விதித்திருந்தது. அந்த காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். ஒரு லட்சத்துக்கான பத்திரம் மற்றும் 2 தனி நபர்களின் உத்தரவாதத்தின் பேரில் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகை அமலாபால் தனக்கு புதுச்சேரியில் வாடகை வீடு இருப்பதாகவும், அந்த வீட்டு முகவரியிலேயே காரை பதிவு செய்ததாவும், இதனால் வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று கூறி வந்தார். போலீஸ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலையில் அமலாபால் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 15ந் தேதி அமலாபால் போலீஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி நேற்று திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் முன் அமலாபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் புதுச்சேரியில் தனக்கு வாடகை வீடு இருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்ததாக தெரிகிறது. அமலாபாலின் ஆவணங்களில் போலீசாருக்கு திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால் வழக்கை தொடர்ந்து நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.