பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடித்த மெர்சல் படம் 2017ம் வருடம் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி அதிகப்படியான வசூலை அள்ளி ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 125 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம், தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் சுமார் 125 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் சுமார் 3 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 82 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதில் அதிக பட்சமாக மலேசியாவில் 19 கோடியும், அமெரிக்காவில் 12 கோடியும் வசூலித்திருக்கிறது. படத்தை வாங்கிய அனைவருக்குமே மெர்சல் படம் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாகி 85 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் மெர்சல் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த டிவி ஒளிபரப்பு உரிமை மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் என மொத்தமாக மெர்சல் படம் மூலம் நடந்த வியாபாரம் 300 கோடியைத் தாண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால், தமிழ் சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களது வியாபார வரவைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.