டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மற்றும் பலர் நடித்த மெர்சல் படம் 2017ம் வருடம் அக்டோபர் 28ம் தேதி வெளியானது. படம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பி அதிகப்படியான வசூலை அள்ளி ஆரம்பித்தது. தமிழ்நாட்டில் மட்டும் 125 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படம், தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் சுமார் 125 கோடி வரை வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுமார் 40 கோடி ரூபாயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் சுமார் 3 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் சுமார் 82 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். இதில் அதிக பட்சமாக மலேசியாவில் 19 கோடியும், அமெரிக்காவில் 12 கோடியும் வசூலித்திருக்கிறது. படத்தை வாங்கிய அனைவருக்குமே மெர்சல் படம் பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படம் வெளியாகி 85 நாட்கள் முடிவடைய உள்ள நிலையில் மெர்சல் படம் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த டிவி ஒளிபரப்பு உரிமை மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், டிஜிட்டல் உரிமை, மற்ற உரிமைகள் என மொத்தமாக மெர்சல் படம் மூலம் நடந்த வியாபாரம் 300 கோடியைத் தாண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால், தமிழ் சினிமாவில் எந்த ஒரு தயாரிப்பாளரும் அவர்களது வியாபார வரவைப் பற்றி வெளியில் சொல்வதில்லை.