ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகை குறித்து அறிவித்தார். தனது அரசியல் அறிவிப்பிற்கு பிறகு எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்த ரஜினி, இன்று முதல் முறையாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் மூலம் கமல் நேற்று பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இன்று ரஜினியும் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்தில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் ரசிகர்களை சந்தித்த ரஜினி, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு பொங்கல் திருநாள் அனைவருக்கும் வளமானதாகவும், செழிப்பானதாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன். அனைவரும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்து என்றார்.