புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் பாஞ்சாலி. மைக்ரோ மீடியா சார்பில் ஏ.பி.சந்திரபோஸ் தயாரித்து இயக்கி உள்ளார். விக்கிவரன், ஜெனி ஜேம்ஸ், செல்லத்துரை, முகிலன் என நடித்திருப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள். விஜயபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இலங்கை இறுதி போரில் குண்டடிபட்ட ஒரு தலைவருக்கு சிகிச்கை அளிக்க மக்கள் போராடுவது போன்று அந்த டிரைலர் இருந்தது. இதனால் படம் இலங்கை இறுதி போர் பற்றிய படம் என்று கருதி யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் படம் இலங்கை இறுதி போர் பற்றியதல்ல என்று விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குனர் ஏ.பி.சந்திரபோஸ். இதுகுறித்து அவர் கூறியதாவது:
போரில் குண்டடிப்பட்ட ஒரு தலைவனை பாதுகாக்க வேண்டும். பல முறை முயற்சித்தும் அது முடியவில்லை. அவரைக் காப்பாற்ற பாஞ்சாலி என்ற ஒரு பெண்ணால்தான் முடியும். அந்த பெண் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. இது இலங்கை போர் பற்றிய கதை அல்ல. லெமுரியா என்ற ஒரு கற்பனை நாட்டில் நடக்கிற கதை. எல்லா நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அரிய மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்த தமிழ் முன்னோர்களின் கதை என்றார்.