ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வர்ணிக்கப்படுகிறவர்கள் ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும். இருவரும் இணைந்து நடித்துள்ள படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக இணைந்து நடித்த பாஜிராவ் மஸ்தானி பெரிய வெற்றி பெற்றது. அடுத்து நடித்துள்ள பத்மவாத் படம் வருகிற 26ந் தேதி வெளிவர இருக்கிறது. இருவரும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இதுகுறித்த செய்திகள் வெளியானபோது அதை இருவரும் மறுக்கவும் இல்லை. ஒப்புக் கொள்ளவும் இல்லை.
இந்த நிலையில் இருவரது திருமணத்துக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. பத்மாவதி படப் பிரச்னையால் மனம் தளர்ந்து போயிருந்த தீபிகாவுக்கு ரன்வீர் சிங் தான் ஆறுதலும், தேறுதலும் அளித்துள்ளார். இதனால் காதல் இன்னும் நெருக்கமாகியிருக்கிறதாம். அண்மையில் தீபிகா படுகோனேவின் 32வது பிறந்த நாளை மாலத்தீவில் தன் செலவில் கொண்டாடினார் ரன்வீர் சிங். அப்போது அவர் தீபிகாவிற்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசளித்ததாக செய்திகள் வெளியானது. மாலத்தீவில் நடந்தது பிறந்தநாள் விழா மட்டுமல்ல திருமண நிச்சயதார்த்த விழாவும் தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமல்லாது தன்வீர் சிங்கும், தீபிகாவும் இணைந்து கோவா மற்றும் லண்டனில் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகு வீட்டை வாங்கி உள்ளனர். திருமணத்திற்கு பிறகு இந்த வீட்டில் தான் செட்டிலாக உள்ளனர். திருமண ஏற்பாடுகளை உறவினர்கள் தீவிரமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.