'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வித்தியாசமான கதைகளையும், கேரக்டர்களையும் தேர்ந்தெடுத்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை வித்யாபாலன். இவர், அடுத்தப்படியாக முன்னாள் பிரதமர் இந்திராவின் ரோலில் நடிக்க உள்ளார். எழுத்தாளர் சகாரியா கோஷ், இந்திராவை மையமாக வைத்து எழுதிய, "இந்திரா - இந்தியாவின் மோஸ்ட் பவர்புல் பிரைம் மினிஸ்டர்" என்ற புத்தகத்தை தழுவி இப்படம் உருவாக உள்ளது.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், சகாரியா கோஷின் "இந்திரா" புத்தகத்தின் உரிமையை வாங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திராவாக நடிக்க நான் எப்போதும் விரும்பியது உண்டு. இந்த புத்தகத்தை மையமாக வைத்து, படமாக உருவாக்கலாமா அல்லது வெப்சிரீஸாக உருவாக்கலாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் இரண்டில் ஒன்று நடக்கும் என்று கூறியுள்ளார்.