பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படம் துருவங்கள் பதினாறு. இப்படம் வெற்றியடைந்து, இயக்குநரான கார்த்திக் நரேனும் பேசப்பட்டார். தற்போது கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக 'நரகாசூரன்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் விரைவில் வெளியாகிறது.
இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ''எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!' என்று இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.