சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விக்ரம், த்ரிஷா நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். என்றாலும் முதல் பாகத்தின் தொடர்ச்சிக்காக த்ரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு முக்கியத்தும் இல்லை என த்ரிஷா படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்றுபோன வகையில் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் தயாரிப்பாளர் சிபு தமீம், த்ரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில் ஒப்பந்தப்படி சாமி 2 படத்தில் த்ரிஷா நடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் கடிதம் நடிகர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் சங்க செயற்குழு விவாதித்து, நடிகை த்ரிஷாவுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தது. அதன்படி சாமி 2 படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று த்ரிஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. த்ரிஷாவின் பதிலை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நடிகர் சங்கம் மேற்கொள்ளும்.
இதற்கிடையில் த்ரிஷா சாமி 2 படத்தில் நடிப்பது உறுதி என்று இயக்குனர் ஹரி, தனது நேர்காணல்களில் தெரிவித்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த பிறகு த்ரிஷாவுடன் சமாதானம் பேசப்பட்டு, அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. புகாரை வாபஸ் பெறததால் அது தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.