'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெய், அஞ்சலி நடித்த பலூன் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஜெய் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததாலும் தினமும் குடித்து விட்டு படப்பிடிப்புக்கு வந்ததாலும் தயாரிப்பாளருக்கு 1.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதை ஜெய்யிடம் வாங்கித் தர வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் கே.நந்தகுமார் மற்றும் டி.என்.அருண் பாரதி ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில் அவர்கள் கூறியிருப்பதாவது:
எங்களது பலூன் திரைப்படம் திட்டமிடப்பட்டதற்கு மாறாக 9 மாதங்கள் தாமதமாக வெளிவந்தது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் ஜெய். அவர் படத்திற்கு தேதிகளை சரியாக கொடுக்காததாலும், படப்பிடிப்புக்கு வராமலும். சரிவர ஒத்துழைக்காததாலும் பட வெளியீடு தள்ளிப்போனது. டப்பிங்கிற்கு கூட சரியாக வராமல் மன உளைச்சலை ஏற்படுத்தினார்.
கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தபோது நாங்கள் தற்கொலை செய்து கொள்ளலாமா என்கிற அளவிற்கு நடந்து கொண்டார். மற்ற கலைஞர்கள் தான் எங்களை காப்பாற்றி படப்பிடிப்பு நிறைவடைய உதவினார்கள்.
கொடைக்கானலில் 20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் அவர் வரவில்லை. இதனால் பல லட்சம் நஷ்டம். இரண்டு நாட்கள் வந்து நடித்தவர் அஞ்சலிக்கு வலிப்பு வந்துவிட்டதாக கூறி சென்னக்கு திரும்பி விட்டார். ஆனால் அது பொய் என்பதை பின்னர் அஞ்சலி மூலமே தெரிந்து கொண்டோம்.
படப்பிடிப்பின்போது தினமும் குடித்து விட்டுதான் வருவார். வந்தாலும் எப்போது படப்பிடிப்பு முடியும் மீண்டும் குடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பார். ஒருவித மெத்தனபோக்குடன் நடந்து கொள்வார். கேரவனுக்குள் போனால் வெளியில்வர மாட்டார். ஒவ்வொரு நாளும் 8 மணி நேர கால்ஷீட்டில் 4 மணி நேரம் அவரை நடிக்க வைப்பதற்கே நாங்கள் சிரமப்பட வேண்டியது இருக்கும். இதை சுட்டிக் காட்டியபோது அஞ்சலிக்கு உடம்பு சரியில்லை என்று படப்பிடிப்பிலிருந்து பாதியில் வெளியேறிவிட்டார். இதனால் போடப்பட்டிருந்த ஷெட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டது. ஜெய்யால் நாங்கள் 1 கோடியே 50 லட்சம் நஷ்டம் அடைந்துள்ளோம். அதனை தயாரிப்பாளர் சங்கம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.