தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் புத்தகம், என்னமோ ஏதோ, தடையறத்தாக்க ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இந்த படங்களுக்குப்பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கிற்கு சென்ற அவர், சில முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி முன்வரிசை நாயகியானார்.
அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தவர், கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்தார். அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என இரண்டு மெகா படங்களில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் இரண்டு படங்களிலுமே ரகுல் பிரீத் சிங் இல்லை. அவர் இடத்தை கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோர் கைப்பற்றி விட்டனர். அந்த வகையில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேசும், சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடிக்கிறார்கள். இதன்மூலம் இரண்டு மெகா படங்களின் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.