‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பில்லா 2 படத்தில் சிறுவயது பில்லாவாக நடித்தவர் அசோக் செல்வன். அதன் பிறகு சூது கவ்வும் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். பீட்சா 2 படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு தெகிடி, சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருவன் படங்களில் நடித்தார்.
தற்போது அவர் ஆக்சிஜன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆள், மெட்ரோ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இது க்ரைம் த்ரில்லர் படம். ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய ஆள் படம், ஒரு வில்லன், ஒரு தனிமனிதனை எப்படி தன் வேலைக்கு பயன்படுத்துகிறான் என்று சொன்னது. மெட்ரோ படம் படித்த இளைஞர்கள் எப்படி செயின் பறிப்பு திருடர்களாகிறார்கள் என்று சொன்னது. அதுபோன்று இந்தப் படம் கடத்தல் தொழில் பற்றியது. இதில் அசோக் செல்வன் கஸ்டம்ஸ் ஆபீசராக நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடத்தல் கும்பலை நடுக்கடலில் விரட்டிச் சென்று பிடிப்பது போன்ற காட்சி கடல் பகுதியில் நடந்து வருகிறது. ஒரு படகில் படப்பிடிப்பு குழுவினர் இருந்தார்கள். இன்னொரு படகில் அசோக் செல்வன் வில்லன்களோடு சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது.
காட்சிப்படி கடலில் குதிக்கும் வில்லன்கனை அசோக் செல்வன் கடலில் குதித்து துரத்த வேண்டும். அதன்படியே எல்லாம் நடந்தது. காட்சி முடிந்ததும் வில்லன்கள் படகில் ஏறிவிட்டார்கள் ஆனால் அசோக் செல்வன் மட்டும் ஏறவில்லை. அவர் கடல் அலையால் படப்பிடிப்பு நடந்த இடத்திலிருந்து 100 அடி தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டிருந்தார். உடனடியாக மீட்பு படகை அனுப்பி அவரை காப்பாற்றி அழைத்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அசோக் செல்வன் கூறும்போது "மரணத்தை கண்ணால் பார்த்துவிட்டு திரும்பினேன். கடலில் குதித்து சில நிமிடங்கள் நடித்தேன். அதன்பிறகு சுற்றிலும் யாரையும் காணவில்லை கடல்தான் இருந்தது. அவ்வளவுதான் என் கதி என்று நினைத்தேன். மீட்பு படகு வந்தபோது நான் நீரில் முழ்கினேன்.
ஒரு கட்டத்தில் படகின் அடியிலேயே நான் இருந்தேன். அதன் பிறகு மேலே வந்து படகை பிடித்து ஏறினேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அது அமைந்துவிட்டது. மீட்பு படகு சில நிமிடங்கள் தாமதமாகியிருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை" என்றார் அசோக் செல்வன்.