இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினி, அரசியல் பிரவேசம் உறுதியாகி இருக்கிறது. விரைவில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிக்க இருக்கிறார். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன.
ரஜினியின் அரசியல் வருகையால், தமிழகம் - கர்நாடகா இடையேயான பிரச்னைகள் தீர்க்கப்படும் என ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர், பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எங்கள் குடும்பம் வறுமை நிலையிலிருந்து கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. எவ்வளவு உயர்ந்தாலும் ரஜினி தான் பட்ட கஷ்டத்தை மறக்கவில்லை. தன்னைப்போல யாரும் கஷ்டப்படக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் அரசியலுக்கு வந்திருப்பது எனக்கும், அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி தான் பிறந்த கர்நாடகாவுக்கும் ரஜினி நன்மை செய்வார். அவரது கனவுகள் நிறைவேறும்.
தமிழகம், கர்நாடகா இடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவை அனைத்தும் ரஜினிக்கு நன்றாகத் தெரியும். அதை தீர்க்கும் வழியும் அவருக்கு தெரியும். அவர் கட்சி பெயர், சின்னத்தை எப்போது அறிவிப்பார் என்று தெரியாது. பொங்கல் தினத்தில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது தனது மன்றங்களை ஒருங்கிணைப்பதிலும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.