ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக வட இந்திய நடிகைகள் யாருமே தமிழ்ப்படங்களில் நடிக்கும்போது சொந்தக்குரலில் டப்பிங் பேச ஆர்வம் காட்டுவதில்லை. ஜோதிகா பிசியான நடிகையாக இருந்தபோது மாயாவி படத்தில் சொந்தக்குரலில் பேசினார். அதன் பிறகு சொந்தக்குரலில் பேசி நடித்த வட இந்திய நடிகை தமன்னாதான்.
இருபத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அவர் சொந்தக் குரலில் பேசி நடித்த ஒரே படம் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான 'தர்மதுரை' படம்தான். இந்த படத்தை தொடர்ந்து தமன்னா நடிப்பில் 'தேவி', 'கத்திச்சண்டை' ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் எல்லாம் தமன்னாவுக்கு இரவல் குரல்தான்.
இந்த படங்களை தொடர்ந்து இப்போது விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்துள்ளார் தமன்னா! விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டப்பிங் உட்பட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது வேலைகள் நடந்து வருகின்றன. 'தர்மதுரை'யில் சொந்த குரலில் பேசி நடித்த தமன்னாவுக்கு இப்படத்தில் மானசி என்ற டப்பிங் கலைஞர் குரல் கொடுத்துள்ளார்.
'தர்மதுரை'யில் அழகாக தமிழ் பேசி நடித்த தமன்னா ஏன் தொடர்ந்து சொந்தக் குரலில் பேசி நடிக்கவில்லை?