'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நெருப்புடா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நாயகனாக நடித்து வரும் படம் பக்கா. எஸ்.எஸ்.சூர்யா என்பவர் இயக்கும் இந்தபடத்தில் நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, சூரி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சி.சத்யா இசையமைக்கிறார். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் கோயில் திருவிழாவில் நடக்கும் கரகாட்ட பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாம். கிராமிய இசைக்கருவிகளை பயன்படுத்தி அனைவரும் ரசிக்கும் வகையில் அந்த பாடலை உருவாக்கியிக்கிறாராம் இசையமைப்பாளர் சி.சத்யா.
இதுபற்றி அவர் கூறுகையில், எங்கேயும் எப்போதும் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தது எனக்கு நல்லதொரு என்ட்ரியாக அமைந்தது. அதையடுத்து நெடுஞ்சாலை, தீயா வேலை செய்யனும் குமாரு, இவன் வேற மாதிரி, காஞ்சனா-2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக என பல படங்களுக்கு இசையமைத்து விட்டேன்.
இந்த பக்கா படத்தில் ஒரு கரகாட்ட பாடலில் பக்கா கிராமத்து இசையை கொடுத்திருக்கிறேன். கரகாட்டக்காரன் படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான கரகாட்டப் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதன்பிறகு சில படங்களில் கரகாட்ட பாடல்கள் வந்தன.
இந்நிலையில், இந்த பக்கா படத்தில் இடம்பெற்றுள்ள கரகாட்டப்பாடலை சூப்பர் ஹிட் பண்ணி விட வேண்டும் என்று சில புதுமையான நாட்டுப்புற இசைக் கருவிகளை பயன்படுத்தி இசையமைத்துள்ளேன். அதனால் இந்த பாடல் பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
மேலும், இந்த பாடலில் கிராமப்புறங்களில் உள்ள சில கரகாட்ட கலைஞர்கள் நடனமாடுகிறார்கள். அதேபோல் இந்த பாடலையும் கரகாட்ட கலைஞர்களையே பாட வைத்திருக்கிறேன். அதனால் ரொம்ப யதார்த்த மாக அந்த பாடல் உருவாகியிருக்கிறது என்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.