பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மலையாள நடிகர் திலீப் சிறையில் இருப்பதால் அவரைப்பற்றிய செய்திகள் வெளிவருவது பெருமளவில் குறைந்துவிட்டது.. அதிலும் குறிப்பாக அவரது மகள் மீனாட்சி என்ன ஆனார் எங்கே இருக்கிறார் என்கிற தகவலும் வெகு ரகசியமாகவே இருக்கிறது.. திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததுமே தனது தந்தை திலீப்புக்கு ஆதரவாக அவருடனேயே இருந்து விட்டார் மீனாட்சி. பின்னர் அவரே திலீப், காவ்யா மாதவன் மறுமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தார்.
சமீபத்தில் தனக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் திலீப் அளித்த மனுவில் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியார் தன் மீது திட்டமிட்டே களங்கம் கற்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டார் என திலீப் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக மீடியாவிலும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் தான் மஞ்சு வாரியர் திலீப்பின் வீட்டிற்கு சென்று தனது மகள் மீனாட்சியை சந்தித்தார் என்கிற தகவல் கசிந்துள்ளது..
அப்படி வீட்டிற்கு வந்த மஞ்சுவை பார்க்க தான் தயாராக இல்லை என முதலில் மீனாட்சி சொன்னார் என்றும், ஆனால் மஞ்சுவை நேசத்துடன் காவ்யா மாதவன் வரவேற்று மகளுடன் பேச வைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. திலீப் தற்போது சிறை சென்ற விஷயத்தில் தனது பங்கு எதுவும் இல்லையென்றும் அப்படி வரும் செய்திகளால் தன்னை தவறாக நினைக்கவேண்டாம் என மகளிடம் மஞ்சு வாரியர் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் மஞ்சுவின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலோ இந்த செய்தி உண்மையில்லை என்றும், மஞ்சு தற்போது கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 'ஆமி' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதாகவும் மறுத்துள்ளார்களாம்.