டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபுதேவா, ஹன்சிகா நடித்து வரும் படம் குலேபகாவலி. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். எஸ்.கல்யாண் இயக்குகிறார். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை பாபிலோன் தொங்குதோட்ட பின்னணியில் அமைக்க விரும்பினார். ஆனாலும் அதை வித்தியாசமாக செய்ய நினைத்தார். அதாவது கார்களை கொண்டு அந்த தோட்டத்தை அமைப்பது என்பது திட்டம். கலை இயக்குனர் கதிர், கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்தார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.
இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள புறநகரில் பத்து ஏக்கர் நிலத்தில் அரங்கம் அமைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் 100 விதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை 25 நாட்களில் உருவாக்கினார்கள். இந்த பாடல் இப்படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை நடனம் அமைக்க வைத்தால் நன்றாக இருக்குமென்று பிரபு தேவா தயாரிப்பாளரிடம் தன் விருப்பத்தை சொன்னவுடன் உடனே தயாரிப்பாளரும் ஐதராபாத்திலிருந்து நடன இயக்குனர் ஜானியை வர வழைத்தார். ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர்.
இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திக்கை அளிக்கப்பட்டது. ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்திற்கு ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்கிறார்கள்.