தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுதேவா, ஹன்சிகா நடித்து வரும் படம் குலேபகாவலி. கே.ஜே.ஆர் ஸ்டூடியோ சார்பில் கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். எஸ்.கல்யாண் இயக்குகிறார். ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ராமதாஸ், ”நான்கடவுள்” ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு நடித்து வருகின்றனர். இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல்காட்சியை பாபிலோன் தொங்குதோட்ட பின்னணியில் அமைக்க விரும்பினார். ஆனாலும் அதை வித்தியாசமாக செய்ய நினைத்தார். அதாவது கார்களை கொண்டு அந்த தோட்டத்தை அமைப்பது என்பது திட்டம். கலை இயக்குனர் கதிர், கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்தார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்க சொன்னார்.
இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள புறநகரில் பத்து ஏக்கர் நிலத்தில் அரங்கம் அமைக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் 100 விதமான கார்களை கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை 25 நாட்களில் உருவாக்கினார்கள். இந்த பாடல் இப்படத்தில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் என்பதால் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானியை நடனம் அமைக்க வைத்தால் நன்றாக இருக்குமென்று பிரபு தேவா தயாரிப்பாளரிடம் தன் விருப்பத்தை சொன்னவுடன் உடனே தயாரிப்பாளரும் ஐதராபாத்திலிருந்து நடன இயக்குனர் ஜானியை வர வழைத்தார். ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை புகுத்தினர்.
இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திக்கை அளிக்கப்பட்டது. ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட இப்பாடல் படத்திற்கு ஹைலைட்டான விஷயமாக இருக்கும் என்கிறார்கள்.