தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இதற்கு முன்புவரை இருந்து வந்த திருநங்கைகள் குறித்த பார்வை மாறி சமீபகாலமாக சினிமாவிலும் பொதுவெளியிலும் ஓரளவுக்கு அவர்களை மரியாதையாக பார்க்கும் எண்ணம் மேலோங்கி உள்ளது. தர்மதுரை படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் மூலம் அதை நமக்கு உணர்த்தியிருந்தார் இயக்குனர் சீனு ராமசாமி.. ராம் இயக்கியுள்ள 'பேரன்பு' படத்தில் அஞ்சலி அமீர் என்கிற திருநங்கை மம்முட்டியுடன் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது, தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில் 23 திருங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது..
பொதுமக்களுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்களும் இதனை வரவேற்றுள்ளனர்... குறிப்பாக மோகன்லா, மஞ்சு வாரியர், பிருத்விராஜ் ஆகியோர் இதுகுறித்த தங்களது மகிழ்ச்சியை உடனே வெளிப்படுத்தியுள்ளனர். மஞ்சு வாரியர் கூறும்போது, “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.. இப்போதுதான் திருநங்கைகள் குறித்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. நானும் எனது படங்களில் நிறைய திருநங்கைகளுடன் பணிபுரிந்திருக்கிறேன். சொல்லப்போனால் 'திருநங்கை' என அவர்களை தனியாக பிரிக்க வேண்டாம். அவர்களும் நம்மைப்போன்றவர்கள் தான்” என இதுகுறித்து வரவேற்பு தெரிவித்துள்ளார் மஞ்சு வாரியர்.
இதுகுறித்து, “கொச்சி மெட்ரோ ரயிலின் பாராட்டத்தக்க நல்ல துவக்கம்” என மோகன்லால் பாராட்டியுள்ளார். பிருத்விராஜ் இந்த செய்தியை தனது முகநூலில் ஷேர் செய்ய, அதை சுமார் ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளனர்.