டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய நாடோடி மன்னன் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல் கல். அந்தப் படம் உருவாக காரணமாக இருந்தது சிவாஜி நடித்த உத்தம புத்திரன் என்றால் நம்ப முடிகிறதா... தொடர்ந்து படியுங்கள்...
1940ம் ஆண்டு பி.யூ சின்னப்பா இரண்டு வேடங்களில் நடித்த உத்தம புத்திரன் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அதன் பிறகு அதே உத்தம புத்திரனை மீண்டும் தயாரிக்க வீனஸ் பிக்சர்ஸ் விரும்பியது. டி.பிரகாஷ்ராவ் இயக்க, நடிகர் திலகம் சிவாஜி, பத்மனி, எம்.என்.நம்பியார், கண்ணாம்பா, தங்கவேலு நடிப்பது என்று முடிவானது. இதற்கான உரிமத்தை மார்டன் தியேட்டர்ஸிடமிருந்து வீனஸ் பிக்சர்ஸ் பெற்றிருந்தது. இதே நேரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உத்தம புத்திரன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இது பி.யூ.சின்னப்பா நடித்த கதை அல்ல. அதேபோன்ற வேறு மாதிரியான கதை.
ஒரு நாள் பத்திரிக்கையில் "எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடிக்கும் உத்தபுத்திரன்" என்றும். "சிவாஜி இரண்டு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்றும் விளம்பரம் வந்தது. இது எம்.ஜி.ஆருக்கு அதிர்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது. "நமது உத்தமபுத்திரன் படத்தை டிராப் பண்ணிவிடுங்கள். நான் இரண்டு வேடங்களில் நடிப்பது மாதிரி வேறொரு கதை தயார் செய்யுங்கள்" என்று ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான கதை இலாகாவுக்கு உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆரின் இந்த திடீர் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் கதை இலாகா தவித்தது. அப்போது எம்.ஜி.ஆர், தான் பார்த்த இஃப் ஐ வேர் கிங் என்ற ஆங்கிலபடத்தின் கதையை கூறி இந்த கதையை ஒன்-லைனாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமையுங்கள் என்றார். அந்த கதைதான் நாடோடி மன்னனாக உருவானது. இதில் பானுமதி ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் வில்லன்கள்.
படத்தை முதலில் கே.ராம்நாத் இயக்குவதாக இருந்தது. படம் தொடங்க இருந்த நேரத்தில் ராம்நாத் திடீரென இறந்துவிட எம்.ஜி.ஆரே இயக்கினார். அவர் இயக்கிய முதல் படம் இது. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் 1958ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இரண்டுமே வெள்ளி விழா படங்கள்தான். ஆனாலும் நாடோடி மன்னன்தான் வசூல் சாதனை படைத்தது.