சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
மலையாளத்தில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் கமலாசுரையா. புகழ்பெற்ற நூல்களை எழுதியதுடன் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி பரபரப்பு கிளப்பியவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் சினிமாவாகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனரான கே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இயக்குகிறார்.
இதில் கமலா சுரையாவாக நடிக்கிறார் வித்யா பாலன். கமலா சுரையா வேடத்தில் நடிப்பதற்காக அவரை பற்றி முழுமையாக படித்து வருகிறார் வித்யா பாலன். கமலா சுரையா எழுதிய நூல்களை மட்டுமல்லாது கமலாவின் சுயசரிதையையும் படித்து வருகிறார். அண்மையில் கமலா சுரையாவின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார். ஒரு கேரக்டராக நடிக்க ஒத்துக் கொண்டால் அந்த கேரக்டராக மாறிவிடுகிற நடிகைளில் வித்யாபாலன் முக்கியமானவர். அந்த வகையில் வித்யா பாலன் இப்போது கமலா சுரையாவாக மாறிக் கொண்டிருக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமலா சுரைய்யாவின் கணவராக முரளி கோபி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.