ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் கமலாசுரையா. புகழ்பெற்ற நூல்களை எழுதியதுடன் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி பரபரப்பு கிளப்பியவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் சினிமாவாகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனரான கே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இயக்குகிறார்.
இதில் கமலா சுரையாவாக நடிக்கிறார் வித்யா பாலன். கமலா சுரையா வேடத்தில் நடிப்பதற்காக அவரை பற்றி முழுமையாக படித்து வருகிறார் வித்யா பாலன். கமலா சுரையா எழுதிய நூல்களை மட்டுமல்லாது கமலாவின் சுயசரிதையையும் படித்து வருகிறார். அண்மையில் கமலா சுரையாவின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார். ஒரு கேரக்டராக நடிக்க ஒத்துக் கொண்டால் அந்த கேரக்டராக மாறிவிடுகிற நடிகைளில் வித்யாபாலன் முக்கியமானவர். அந்த வகையில் வித்யா பாலன் இப்போது கமலா சுரையாவாக மாறிக் கொண்டிருக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமலா சுரைய்யாவின் கணவராக முரளி கோபி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.