பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் சினிமாவின் முதல் ஷங்கர் என்றால் அது ராஜா சாண்டோதான். அவரது படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருக்கும். அவர் இயக்கிய ஒரு படம்தான் 'சவுக்கடி சந்திரகாந்தா‚. பக்காவன முதல் கமர்ஷியல் படம் என்றும் இதனை குறிப்பிடலாம். கே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதை நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது. அதைத்தான் ராஜா சாண்டோ படமாக இயக்கினார். ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் 1936ம் ஆண்டு வெளிவந்தது.
போலி சாமியாரை பற்றிய கதை. திருக்களூர் பண்டார சன்னிதி என்ற சாமியாருக்கு ஏராளமான காதலிகள், ஒவ்வொரு காதலியும் ஒவ்வொரு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சாமியாரின் கொட்டத்தை ஹீரோ எப்படி அடக்குகிறார் என்பதுதான் கதை. சாமியாராக காளி என்.ரத்னம் நடித்திருந்தார். அவரை அடக்கும் ஹீரோவாக பி.யூ.சின்னப்பா நடித்திருந்தார். பி.கே.ராஜலட்சுமி ஹீரோயின். என்.எஸ்.கிருஷ்ணன் காமெடியன்.
சினிமாவில் காதலர்கள் தொடாமல் பேசிக் கொண்டிருந்தபோது தொட்டு பேசி நடிக்க வைத்தவர் ராஜா சாண்டோ. இந்தப் படத்தில் கூடுதலாக ஒரு படி மேலே போய் நடிகைகளை நீச்சல் உடையுடன் நடிக்க வைத்தார். சாமியாரின் காதலிகள் அனைவரும் ஒரு தடாகத்தில் நீந்துவது போன்ற காட்சியில் நடிகைகளுக்கு குட்டை டவுசரும், சின்ன சட்டையும் வைத்திருந்தார். உடையை பார்த்த நடிகைகள் தெறித்து ஒடினார்கள். ஆடை மறைக்கும் இடம் தவிர மற்ற இடங்களை மறைக்கும் மெல்லிய உடையை (ஸ்கின் டிரஸ்) அவர்களிடம் காட்டி விளக்கிச் சொன்ன பிறகு நடித்தார்கள். படம் வெளிவந்து தியேட்டரில் படத்தை பார்த்த நடிகைகள் அதிர்ச்சி அடைந்தார்க்ள. கருப்பு வெள்ளை படம் என்பதால் ஸ்கின் டிரஸ் அணிந்திருந்தது தெரியவில்லை.
இந்தப் படம் இன்னொரு சாதனையை படைத்தது. அப்போதெல்லாம் ஒரு படம் ஒரு ஊரில் ஒரு தியேட்டரில்தான் திரையிடப்படும். 'சவுக்கடி சந்திரகாந்தா‚ முதன் முறையாக சென்னையில் 2 தியேட்டர்களில் வெளியானது.