ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
எம்.ஜி.ஆரின் நம்பிக்கைகுரியவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பன். அவரின் தனி கணக்கராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவர் சத்யா மூவீஸ் என்ற பெயரில் தனி நிறுவனம் தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். அதில் பல படங்களுக்கு ஆர்.எம்.வீரப்பனே கதை எழுதியுள்ளார். அப்படி அவர் எம்.ஜி.ஆருக்காக எழுதி வைத்திருந்த கதைதான் 'ராணுவ வீரன்'.
அந்தக் கதையில் எம்.ஜி.ஆர் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டு முதல்வர் ஆகிவிட்டதால் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு அந்தக் கதையை ரஜினியிடம் சொல்லி அவரை நடிக்க வைத்தார். படத்தை சத்யா மூவீஸ் தயாரித்தது. ரஜினி ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். வாலி, புலமைபித்தன் முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1981ம் ஆண்டு வெளிவந்தது.
ஒரு ராணுவ வீரனுக்கும், நக்சலைட் தீவிரவாதிக்குமான மோதல்தான் கதை. ரஜினி ராணுவ வீரனாகவும், சிரஞ்சீவி தீவிரவாதியாகவும் நடித்தனர். சிரஞ்சீவி வில்லனாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் எம்.ஜி.ஆரை தமிழக முதல்வராகவே தோன்ற வைக்க ஆர்.எம்.வீரப்பன் முயற்சித்தார். அது கடைசி வரை முடியவில்லை. படம் 100 நாட்கள் ஓடி வெற்றிப் படமானது.