மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் திலகம் சிவாஜியை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்திய படம் 'பராசக்தி'. புராண படங்களும், பக்தி படங்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய படம். தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படம். அதில் தி.மு.க தலைவர் எழுதி சிவாஜி பேசிய வசனம் இன்றைக்கும் பிரபலம். பராசக்தி படத்திற்காக ஒல்லியா இருந்த சிவாஜி 3 மாதங்கள் நன்றாக சாப்பிட்டு வெயிட் போட்டு நடித்தார். அவர் முதன் முதலில் நடித்த இடத்தில் ஏவிஎம் ஸ்டூடியோ நிர்வாகிகள் நினைவு தூண் அமைத்திருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த முதல் படம் பராசக்தி என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அது உண்மை அல்ல. அவர் முதலில் நடித்த படம் 'பூங்கோதை'. அப்போது பிரபலமாக இருந்த நடிகை அஞ்சலிதேவி, அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெலுங்கு படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தெலுங்கு, தமிழில் தயாரித்த படம் தான் பூங்கோதை. 1953ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவாஜி ஹீரோ அல்ல. அக்கினினேனி நாகேஸ்வரராவ் ஹீரோ, அஞ்சலிதேவி ஹீரோயின். ஆதி நாரயணராவ் இசை அமைத்திருந்தார், எல்.வி.பிரசாத் இயக்கி இருந்தார். பராசக்தி 1952ம் ஆண்டே வெளிவந்து விட்டதால் சிவாஜி நடித்து வெளியான முதல் படம் என்ற பெருமையை பெற்றது.