சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் |
திருமணத்திற்குப்பின் தனது கணவன்மார்களுக்காக தங்களது பிடிவாதங்களை, கட்டுப்பாடுகளை தளர்த்தி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகும் பெண்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால் நஸ்ரியாவோ திருமணத்திற்காகவே தனது கொள்கையை தளர்த்திக் கொண்ட உண்மையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நேரம் படம் மூலம் அறிமுகமானபோது இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மலையாள நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்துகொண்டு இளம் ரசிகர்களின் இதயங்களை உடைத்து நொறுக்கினார் நஸ்ரியா.
என்னதான் காதல் என்றாலும் முன்னணியில் இருக்கும் நேரத்தில் அதிலும் மிக குறைந்த வயதில் திருமணத்திற்கு நஸ்ரியா எப்படி சம்மதித்தார் என திரையுலகமும் ரசிகர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.. ஆனால் அதுபற்றி நஸ்ரியா சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.. தன்னுடைய 25வது வயதில் தான் திருமணம் செய்துகொள்ள விரும்பினாராம் நஸ்ரியா. ஆனால் பஹத் பாசிலுக்கு அவரது வீட்டினர் தீவிரமாக பெண் தேடுதலில் இறங்கி அந்த வருடமே திருமணத்தை நடத்த விரும்பினார்களாம். அதனால் பஹத் பாசிலை இழக்க விரும்பாததால் தான் தனது பிடிவாதத்தை தளர்த்தி உடனே திருமணத்திற்கு சம்மதித்தாகவும் கூறியுள்ளார் நஸ்ரியா.
ஓ.. இதுதான் காதல் என்பதா..?