ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்குப்பின் தனது கணவன்மார்களுக்காக தங்களது பிடிவாதங்களை, கட்டுப்பாடுகளை தளர்த்தி குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகும் பெண்கள் தான் நம் நாட்டில் அதிகம். ஆனால் நஸ்ரியாவோ திருமணத்திற்காகவே தனது கொள்கையை தளர்த்திக் கொண்ட உண்மையை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நேரம் படம் மூலம் அறிமுகமானபோது இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மலையாள நடிகர் பஹத் பாஸிலை திருமணம் செய்துகொண்டு இளம் ரசிகர்களின் இதயங்களை உடைத்து நொறுக்கினார் நஸ்ரியா.
என்னதான் காதல் என்றாலும் முன்னணியில் இருக்கும் நேரத்தில் அதிலும் மிக குறைந்த வயதில் திருமணத்திற்கு நஸ்ரியா எப்படி சம்மதித்தார் என திரையுலகமும் ரசிகர்களும் ஆச்சர்யப்பட்டார்கள்.. ஆனால் அதுபற்றி நஸ்ரியா சமீபத்தில் மனம் திறந்துள்ளார்.. தன்னுடைய 25வது வயதில் தான் திருமணம் செய்துகொள்ள விரும்பினாராம் நஸ்ரியா. ஆனால் பஹத் பாசிலுக்கு அவரது வீட்டினர் தீவிரமாக பெண் தேடுதலில் இறங்கி அந்த வருடமே திருமணத்தை நடத்த விரும்பினார்களாம். அதனால் பஹத் பாசிலை இழக்க விரும்பாததால் தான் தனது பிடிவாதத்தை தளர்த்தி உடனே திருமணத்திற்கு சம்மதித்தாகவும் கூறியுள்ளார் நஸ்ரியா.
ஓ.. இதுதான் காதல் என்பதா..?