டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமலஹாசன் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், பகுத்தறிவு சிந்தனைவாதி. அதனால் நாத்திகத்தில் ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிப்பதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார், கமல். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி நடிக்க மலையாளம் த்ருஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.
ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், தூத்துக்குடி பகுதிகளில் நடந்து வந்த பாபநாசம் படப்பிடிப்பு தற்போது நாங்குனேரி பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இப்படத்தில் சில ஆன்மீக காட்சிகளும் உள்ளதாம். அதனால் அதை படமாக்க அங்கு அமைந்துள்ள ஸ்ரீவானமாமலை மடத்தில் உள்ள பெருமாள் கோயில் சரியாக இருக்கு என்று முடிவு செய்தாராம் கமல்.
அதையடுத்து, அந்த மடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு, ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுரை ஜீயரை சந்தித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டாராம். மடாதிபதியும் அனுமதி வழங்கினாராம். 5 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த கமலின் நெற்றியில் பெரிய விபூதி பட்டை போட்டிருந்தாராம்.
நாத்திகவாதி கமல், மடாதிபதியை சந்தித்ததோடு, நெற்றியில் விபூதி அணிந்து வந்ததால், கமல் ஆன்மீகத்துக்கு மாறி விட்டதாக நாங்குநேரி பகுதிகளில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறதாம்.