லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்களைக் கடந்த நிலையில் பல்வேறு நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருகிறது.
தற்போது இந்த படத்தை இவ்வருடத்திற்குள் திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் படக்குழு உள்ளனர். ஏற்கனவே இதில் சில கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இப்போது உலகமெங்கும் ஏ.ஐ ஆக்கிரமிப்பு அதிகமாகியுள்ளதால் இதன் தாக்கம் சினிமாவிலும் உள்ளது. இதனால் ராம் மற்றும் படக்குழு அந்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மாற்றாக ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகளை இணைத்துள்ளனர். இப்போது படத்துடன் பார்க்கும் போது அவ்வளவு நன்றாக ஏ.ஐ தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்துள்ளது என படத்தை பார்த்தவர்கள் தங்கள் கருத்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர்.