ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

கேரளாவில் அகில கேரள வானொலி நாடகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. மே 10 முதல் 18 வரை ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் இரவு 9:30 மணிக்கு நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. அதில் 'தெய்வத்தின் மனமாற்றம் கண்டு' என்கிற நாடகம் ஒலிபரப்பாகிறது. இதில் அசோகன் கதாபாத்திரத்திற்கு நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் இயற்கைச் சுரண்டலைப் பின்னணியாகக் கொண்ட இந்த நாடகத்தில், தற்கொலை செய்துகொள்ள வரும் அசோகன் மற்றும் அங்கிருக்கும் ஒரு மரம் இருவருக்கும் இடையேயான உரையாடலே முக்கிய கதையாகும். திரையுலகில் ஒரு மிகத் திறமையான நடிகராக இருந்தபோதும், வானொலி என்பதால் ஒவ்வொரு வசனத்தையும் மிகச் சரியாகப் பேசவேண்டும் என்பதற்காக பலமுறை டேக் எடுத்து பேசினாராம் மோகன்லால். தனது உடல்நிலை சரியில்லாத போதும் நாடகத்தின் மீதான ஈடுபாட்டால் மோகன்லால் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.