லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை கருப்பு சுப்பையா என்று வைத்துக் கொண்டார். கவுண்டமணி செந்தில் கூட்டணியில் 80 படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் சற்று பெரிய ரோலில் நடித்தார். கவுண்டமணியின் கார் டிரைவருக்கு கொடுக்கப்படும் பேட்டா அளவில்தான் சுப்பையாவிற்கு சம்பளம். அதாவது 300 ரூபாய்.
பெரிய மருது படத்தில் கவுண்டமணியும், செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக வருவார்கள். அப்போது தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என கருப்பு சுப்பையா கேட்க, கடுப்பாகும் கவுண்டமணியும் செந்திலும் அவருக்கு ஈயம் பூசிவிடுவார்கள். இந்த காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
ஆனால் இந்த காட்சி படமாகும்போது அவருக்கு நிஜமான பெயிண்டையே பூசி உள்ளனர். அந்த பெயிண்டுடனேயே நடித்தார் சுப்பையா. இதன் காரணமாக பெயிண்டில் உள்ள கெமிக்கல்கள் அவரது உடலுக்குள் சென்று பின்னாளில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தியது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க ஆள இல்லாமலும், 2013ம் ஆண்டு இறந்தார்.