Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா

12 மே, 2026 - 12:41 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-black-man-who-died-for-the-character
Advertisement

1980களில் கவுண்டமணி, செந்தில் காமெடிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் கருப்பு சுப்பையா. ஏற்கெனவே வெள்ளை சுப்பையா என்று ஒருவர் இருந்ததால் இவர் தனது பெயரை கருப்பு சுப்பையா என்று வைத்துக் கொண்டார். கவுண்டமணி செந்தில் கூட்டணியில் 80 படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் சற்று பெரிய ரோலில் நடித்தார். கவுண்டமணியின் கார் டிரைவருக்கு கொடுக்கப்படும் பேட்டா அளவில்தான் சுப்பையாவிற்கு சம்பளம். அதாவது 300 ரூபாய்.

பெரிய மருது படத்தில் கவுண்டமணியும், செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக வருவார்கள். அப்போது தன்னிடம் இல்லாத அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என கருப்பு சுப்பையா கேட்க, கடுப்பாகும் கவுண்டமணியும் செந்திலும் அவருக்கு ஈயம் பூசிவிடுவார்கள். இந்த காட்சி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

ஆனால் இந்த காட்சி படமாகும்போது அவருக்கு நிஜமான பெயிண்டையே பூசி உள்ளனர். அந்த பெயிண்டுடனேயே நடித்தார் சுப்பையா. இதன் காரணமாக பெயிண்டில் உள்ள கெமிக்கல்கள் அவரது உடலுக்குள் சென்று பின்னாளில் பலவித பிரச்னைகளை ஏற்படுத்தியது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க ஆள இல்லாமலும், 2013ம் ஆண்டு இறந்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன்டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த ... பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

JeevaKiran - COONOOR,இந்தியா
13 மே, 2026 - 06:05 Report Abuse
JeevaKiran நல்ல நடிகர். அந்த அரிசி மில் காமடி சூப்பர். ஒரு நெல் அரைத்தால் ஒரு அரிசி. அப்போ 100 மூட்டை நெல் அரைத்தால் 100 மூட்டை அரிசி
Rate this:
சசிக்குமார் திருப்பூர் இதே பின்விளைவுகள் ரோபோ சங்கர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap